Tuesday, August 31, 2021

நான் இந்து - பகுதி 3

இந்து மதத்தின் அடிப்படை கட்டமைப்பு, சேவைகள் பற்றிய புரிதல் வேண்டும்.

அந்த புரிதல் உள்ளவர்களும் செய்யும் பிழை என்ன என்றால், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தவறியது.

வீடுகளில் தினமும் சாமி கும்பிடும் நாம் , நம் குழந்தைகளுக்கு இதை தினமும் செய்ய வேண்டும் என்று சொல்லி நடைமுறை படுத்தாமல் விட்டு விட்டோம்.

ஆனால் மற்ற மதங்களில் இதை தினமும் செய்ய பழக்கப்படுத்த படுகின்றனர்.
அவர்களும் இந்த உயர்ந்த இந்து மதத்தில் இருந்து சென்றோரே.

வாரத்தில் குறைந்தது எத்தனை முறை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றோம் என்று எண்ணி பார்க்க வேண்டும்.
நம் குடும்பத்தில் எத்தனை நபர்கள் இதை செய்கின்றோம் என்று கவனமாக பார்க்க  வேண்டும்.

வாழ்கையில் பழக்கவழக்கங்கள் ஒன்று இருந்து அதை தினமும் நம் இன்றைய தலைமுறையும் தொடர்ந்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இந்த இந்து மதத்தில் உள்ளது போன்ற
சுதந்திரமான வழிபாட்டு முறைகளும் கட்டுப்பாடுகளும் வேறு எந்த மதத்தில் நமக்கு மத்தியல் இல்லை.

நம் கோயிலுக்கு இந்த மதம் சேர்ந்த அனைவரும் வரலாம் என்று தான் உள்ளது.
மாதம் சந்தா கட்டணம் செலுத்தும் முறை கோயிலுக்கு இல்லை.
இந்த கோயிலுக்கு மட்டுமே வரவும், செல்லவும் அனுமதி என்ற அடிமை முறை நம் மதத்தில் இல்லை.

சமூக பாதுகாப்பு சேவைகள் என்று சொல்லி, மதம் மாற்றும் முறையும் நம்மில் இல்லை.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கண்ட 
(சமூக பாதுகாப்பு சேவைகள் என்று சொல்லி, மதம் மாற்றும்) முறைக்கு உதாரணம்.

ஆனால் நம் மதத்தில் இருந்து செல்லும் அனைவரும் ஒன்றை மறந்து விட்டார்கள்.

மேலே கூறிய வழிபாட்டு முறைகளை இந்த இந்து மதத்தில் இருந்தது வரை கண்டு கொள்ளாதவர்கள், மற்ற மதத்திற்கு சென்ற பின்பு , செய்யும் வழிபாடுகளை கண்டால், நமக்கே சற்று அய்யம் வராமல் இல்லை.

நம் மதத்தில் என்ன தவறு கண்டு?, என்ன குறைகளை கண்டு?, மற்ற மதத்தை தேடி சென்று சேர்ந்தோம்?  

நம் இந்து மதத்தை நாம் சரியாக புரிந்து கொண்டு இருக்கின்றோமா?

மதங்களை கடந்தது தான், "அன்பு".
ஆனால், அந்த அன்பையும் கொண்டு மதமாற்றம் செய்யும் நிலை மிகவும் கவலைக்குரியது.


தொடரும் .... பகுதி 4

No comments:

Post a Comment

The Kashmir Only to India