Friday, December 3, 2010

விவசாயி.....

படி அரிசி அளப்பவனுக்கு..... 
பிடி அரிசி இல்லை ....... 
வாய்க்கரிசி போட...... 
விவசாயி.....

Wednesday, December 1, 2010

பிரபஞ்சம் உணருமா

உண்ண உணவு , உடுத்த உடை , உறங்க இடம் ,,,
இது எத்தனை பேருக்கு கிடைக்கின்றன,,


வருஷம் முழுவதும் கஷ்டப்பட்டாலும்
ஏழை விவசாயிக்கு  கஷ்டப்பட்டது தான் மிட்சம்.


ஏழை ,,,,
" தன் கண்ணில் நீர் விட்டு காப்பதாலோ ஏனோ,,
கண்ணீர் மட்டும் அவர்களுக்கு மிச்சமாய் ---
கூலியாய் " ....


ஏ படித்த மேதைகளே ,,,,,
மீண்டும் 
விவசாயம் வசந்தம் பெறவில்லை எனில் .....
விவசாயி சிரிக்கவில்லை எனில் ......


தரம் கெட்ட உலகில் நீயும் நானும் 
அடுத்த வேளை உணவிற்கு மல்லுக்கு நிற்க நேரும்போது


நம் மூதாதையர்கள் எள்ளி நகைப்பார்கள்.....


மனிதனின் படைப்பான 
கணிப்பொறி கற்றவன் மேதை என்றால் ...
கடவுளின் படைப்பான விவசாயம் கட்டறவன்....
எவ்வகையில் உன்னை விட எளியன் .....


இந்த பறந்த உலகமும்,,,,,,
விவசாயீயை தள்ளி நிற்க சொன்ன 
படித்த முட்டாள்களும் இதை உணரும் போது....
விவசாயி மாண்டு இருப்பான்,,,,,
விவசாயம் புதைத்த இடத்தில்கூட புல்
முளைத்து காயிந்து போய் இருக்கும்...


ஜாக்கிரதை
விவசாய புரட்சி ஒன்றுமட்டுமே 
நம் வாழ்விற்கு வழிவகுக்கும்......


பிரபஞ்சம் துளிர்க்க விவசாயி துளிர்க்க வேண்டும்..













































Books On-line Reading's

http://www.chennailibrary.com/ebooks/ebooks.html