அன்று அந்த ஒரு செயல், அந்த பெரியவரிடம் இருந்து எதிர் பார்க்கப்பட்டது, அவர் பெரிய மனிதர் என்ற எண்ணம் இருந்ததால். ஆனால் அவரால் இயன்ற, முடியும் என்ற செயலை செய்யாமல் இருந்து, லட்சங்களில் மரணம் நிகழ காரணமாய் இருந்தது மட்டும் இன்றி, ஒரு உச்சபட்ச நாடகம் ஒன்றினை தன்னுடைய குடும்ப நலம் வேண்டி, குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக ஒரு இடத்தில் ஒன்று கூடி, எல்லாம் முடிந்த பின்பு , என்னால் எல்லாம் நன்றாக முடிந்தது என்று சொல்லி, வஞ்சித்தார்கள்.
ஆனால் இன்று, இந்த ஒரு செயல், இவரிடம் இருந்து எதிர் பார்க்கப்படவில்லை, பெரிய மனிதர் என்ற எண்ணம் இருந்ததால். ஆனால் இவரால் இயன்ற, முடியும் என்ற செயலை செய்யாமல் இருந்துவிட்டு, முடியாத செயலை, முடியும் என்று ஒரு உச்சபட்ச நாடகம் ஒன்றினை தன்னுடைய குடும்ப நலம் வேண்டி, குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக ஒன்று கூடி, எல்லாம் முடிந்த பின்பு , என்னால் எல்லாம் நன்றாக முடிந்தது என்று சொல்லி, வஞ்சிக்கின்ரணர்.
முதலில் சொன்னது தொப்பில் கொடி உயிர்களின் ஓலம். அதற்கு ஒரு நாடகம் நடந்தது,
இரண்டாவது உக்கிரைன் மூலம் ஆதாயம் தேட நினைக்கும் ஓநாய்களின் ஓலம்.
ஆனால், ஒரு சிறு வித்தியாசம் , அன்று மேலே இருந்தது ஒரு காட்சி, இன்று மேலே இருப்பது ஒரு காட்சி.
ஆனால், இரண்டு நிலையிலும், கீழே இருந்த கட்சி ஒன்று, காட்சியும் ஒன்று.
புரிந்து கொண்டார், புத்திசாலி.