Friday, August 23, 2013

செஞ்சி - "திருநாதன் குன்று"

"திருநாதன் குன்று" செஞ்சியில் இருந்து சுமார் 1.5 கி.மி. தொலைவில் உள்ள மலை, இங்கு இருக்கும் ஒரு பெரிய பாறையில் 24 சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளது, சமணம் தழைத்தோங்கிய தமிழகத்தில் 24 தீர்த்தங்கரர்களையும் ஒரே இடத்தில் இங்கு மட்டுமே காண முடியும்

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில், "சந்திரநந்தி" என்ற சமண துறவி 57 நாட்கள் கடவுளுக்கு உண்ணா நோன்பு இருந்து இந்த இடத்தில் தான் உயிரை விட்டுள்ளார். "இளையபட்டாரா" என்ற இன்னொரு சமண துறவி 30 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிரை விட்டுள்ளார்.இங்கு சமணர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது
 நன்றி : சசிதரன்
 
 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் சிறப்பு அம்சங்கள்

பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !

கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.


இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!






கும்பகோணம் சுற்றுப்புற கோவில்கள்


 கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற கோவில்கள் பற்றிய தகவல்களை கீழ்காணும் நிலை தொடர்பால் காணலாம்.


http://shanthiraju.wordpress.com/around-kumbakonam-1/

http://shanthiraju.wordpress.com/around-kumbakonam-2/

சுந்தரேஸ்வரர் கோவில் ,கருப்பூர் -கும்பகோணம்

சுந்தரேஸ்வரர் கோவில் ,கருப்பூர் -கும்பகோணம்

இறைவனுக்கு அபிஷேகமாகும் நீரை கோமுகியிலிருந்து தன் தலையில் ஒரு பாத்திரத்தில் பிடிக்கும் பூத கணம் பின் அதன் குதத்தின் வழியே ஒரு பெண்ணுருவின் தலையினுள் சென்று வயிற்றின் துளை வழியே வெளியேறும் வகையில் வடிவமைக்கபட்டிருக்கிறது .

சிந்திக்கவே திணறவைக்கும் ஒரு யோசனை மிகுந்த வடிவமைப்பை கலை வடிவமாக்கி காட்சி படுத்தியிருக்கிறார்கள் . காண்பதற்கு கூட நேரமின்றி விரையும் நவீன உலகில் அதிசயங்கள் கூட ஆச்சர்யபடுத்துவதில்லை . .





நன்றி : தமிழ் கோவில்கள் 



Tuesday, August 20, 2013

"கொங்கு நாட்டு சிற்ப ஸ்தலம்" - திருப்பூர்

"கொங்கு நாட்டு சிற்ப ஸ்தலம்"

சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை அர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.

திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில், பாண்டிய மன்னர்களாலும் சோழர்களாலும் கட்டப்பட்டுள்ள இந்த "சுக்ரீஸ்வரர் கோயில்" குறித்த வரலாறும் விவரமும் இது வரை மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. தற்போது மத்திய தொல்லியல் துறையால் "பாதுகாகப்பட்ட சின்னமாக" அறிவிக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்.

1) அம்மனுக்கென தனி கோயிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது.

2) அம்மனுக்கென தனி கோயில்,கோயிலின் வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

3)கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4)ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில்.

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.

6) கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.
நன்றி : சசிதரன்







Thursday, August 8, 2013

பனை மலை கோயிலுக்கும் செல்லலாம்...


செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் உள்ளது "பனைமலை". வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க, வாங்க, இங்கே தான் இருக்கேன் " என்று சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே கம்பீரமாக மலையின் மீது இருந்த இந்த 1300 வருட பொக்கிஷம் எங்களை வரவேற்பதை போன்றிருந்தது. செங்குத்தான மலை, மலை ஏறுவதற்கு பாறைகளையே படிகளாக செதுக்கி இருகிறார்கள். மேலே சென்றதும் அவர் சொன்னது போல், இந்த இடம் ஒரு சொர்க்கம் தான், மலை மீது நின்று பார்த்தால், கோயிலின் முன் புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத நிலம், அதற்கு நடுவே சாலை, பின்புறம் மலைகள், நடுவிலே ஏரி, ஆனால் தவறான காலத்தில் வந்து விட்டோம், அறுவடை முடிந்த வேலை, மழை இல்லாமல் வறண்ட ஏரி, சுட்டெரிக்கும் சூரியன், இந்த இடத்திற்கு செல்ல சரியான காலம், நவம்பர், டிசம்பர்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவரும், மாமல்லபுரம் சிற்பங்களை கொடுத்தவருமான "ராஜசிம்ம பல்லவனால்" கட்டப்பட்டது இந்த கோயில், கைலாசநாதர் கோயிலை போலவே எல்லா இடங்களிலும் ஓவியங்களை தீட்டி இருக்கிறார்கள், அதற்கான சுவடுகள் ஆங்காங்கே தெரிகிறது, ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு ஓவியம் இன்றும் உயிரோடு உள்ளது. காண கண்கோடி வேண்டும், என்ன வளைவு, என்ன நெளிவு, என்ன நிறங்கள்!! ஆஹா பார்க்கும் போது மனிதர்கள் அப்போது எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருகிறார்கள் என்பதை காட்டுகிறது.

கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன சன்னதியில் ஒரு சுரங்கம் உள்ளது, உள்ளே சென்று பார்த்தேன் சுமார் ஆறடி உயரத்திற்கு கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும், சென்றதும் உள்ளே ஒரு சிறிய அறை, இருட்டாக இருந்தது, விஷ ஜந்துக்கள் இருந்தாலும் தெரியாது. வாயில் கைபேசியை கடித்துக்கொண்டு அதன் ஒளியால் மட்டுமே காண முடிந்தது.

அங்கிருந்து வெளியில் வந்து சுற்றி பார்க்கும்போதுதான் இன்னொன்றையும் பார்க்க நேர்ந்தது. அந்த கோவிலுக்கு நீர்வளம் சேர்க்க, அங்குள்ள பாறைகளை குடைந்து குளமாக மாற்றியிருக்கிறார்கள். குளம், ஓவியம், சிற்பம், கட்டிட அழகு, அலுக்காத இயற்கை வளம் போன்றவற்றை கண்டு, இறங்க மனமில்லாமல் மலையை விட்டு இறங்கினோம்.

அனைவரும் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று பாருங்கள், உங்களுடைய பயணத்தை வெயில் முடிந்ததும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
https://www.facebook.com/media/set/?set=a.508117225918269.1073741827.100001599881709&type=1

 
Photo: இரு வாரங்களுக்கு முன்பு தேவனூரில் ஐம்பொன் சிலைகளை காணச் சென்ற போது, தேவனூர் கோயில் பணிகள் தொடங்க காரணமாக இருந்த, இயக்குனர் திரு.பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் என்னுடைய நண்பர் "திரு.தமிழ் செல்வனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
 உங்கள் மாவட்டத்தில் ராஜ ராஜன் கட்டிய கல்லூரி ஒன்று உள்ளது அதனுடன் சேர்த்து இன்னும்  சில புராதானமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை காண வேண்டும் உதவுவீர்களா? என்று கேட்டதும், துளியும் யோசிக்காமல் மனிதர் அடுத்த வாரம் வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றார்  அப்போது அவர் " பனை மலை " கோயிலுக்கும் செல்லலாம் எனக்கு மிகவும் பிடித்த இடம் என்று கூறினார், ஏற்கனவே இந்த கோயிலின் சிறப்புகளை ஓரளவிற்கு இணையங்களில் படித்திருக்கிறேன், மேலும் இயக்குனர்கள் ரசிக்கும் இடம் என்றால் நிச்சயம் அழகானதாகவே இருக்கும் என்று புறப்பட்டோம் என்னுடன் நண்பர் ரமேஷும் உடன்வந்திருந்தார்.
 
செஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் உள்ளது "பனைமலை". வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க, வாங்க, இங்கே தான் இருக்கேன் " என்று சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே கம்பீரமாக மலையின் மீது இருந்த இந்த 1300 வருட பொக்கிஷம் எங்களை வரவேற்பதை போன்றிருந்தது. செங்குத்தான மலை, மலை ஏறுவதற்கு பாறைகளையே படிகளாக செதுக்கி இருகிறார்கள். மேலே சென்றதும் அவர் சொன்னது போல், இந்த இடம் ஒரு சொர்க்கம் தான், மலை மீது நின்று பார்த்தால், கோயிலின் முன் புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத நிலம், அதற்கு நடுவே சாலை, பின்புறம் மலைகள், நடுவிலே ஏரி, ஆனால் தவறான காலத்தில் வந்து விட்டோம், அறுவடை முடிந்த வேலை, மழை இல்லாமல் வறண்ட ஏரி, சுட்டெரிக்கும் சூரியன், இந்த இடத்திற்கு செல்ல சரியான காலம், நவம்பர், டிசம்பர்.
 
காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவரும், மாமல்லபுரம் சிற்பங்களை கொடுத்தவருமான "ராஜசிம்ம பல்லவனால்" கட்டப்பட்டது இந்த கோயில், கைலாசநாதர் கோயிலை போலவே எல்லா இடங்களிலும் ஓவியங்களை தீட்டி இருக்கிறார்கள், அதற்கான சுவடுகள் ஆங்காங்கே தெரிகிறது, ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு ஓவியம் இன்றும் உயிரோடு உள்ளது. காண கண்கோடி வேண்டும், என்ன வளைவு, என்ன நெளிவு, என்ன நிறங்கள்!! ஆஹா பார்க்கும் போது மனிதர்கள் அப்போது எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருகிறார்கள் என்பதை காட்டுகிறது.
 
கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன சன்னதியில் ஒரு சுரங்கம் உள்ளது, உள்ளே சென்று பார்த்தேன் சுமார் ஆறடி உயரத்திற்கு கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும், சென்றதும் உள்ளே ஒரு சிறிய அறை, இருட்டாக இருந்தது, விஷ  ஜந்துக்கள் இருந்தாலும் தெரியாது. வாயில் கைபேசியை கடித்துக்கொண்டு அதன் ஒளியால் மட்டுமே காண முடிந்தது.

அங்கிருந்து வெளியில் வந்து சுற்றி பார்க்கும்போதுதான் இன்னொன்றையும் பார்க்க நேர்ந்தது. அந்த கோவிலுக்கு நீர்வளம் சேர்க்க, அங்குள்ள பாறைகளை குடைந்து குளமாக மாற்றியிருக்கிறார்கள். குளம், ஓவியம், சிற்பம், கட்டிட அழகு,  அலுக்காத இயற்கை வளம் போன்றவற்றை கண்டு, இறங்க மனமில்லாமல் மலையை விட்டு இறங்கினோம்.
 
அனைவரும் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று பாருங்கள், உங்களுடைய பயணத்தை வெயில் முடிந்ததும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

https://www.facebook.com/media/set/?set=a.508117225918269.1073741827.100001599881709&type=1                                 
     
நன்றிகள்:- சசிதரன்

பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்...


பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா? வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின் அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

தற்போது இந்த கோயிலை படத்தில் இருக்கும் இந்த பெரியவரும் அவரின் பேத்தியும் தான் பார்த்துக்கொள்கிறார்கள், இங்கு யாருமே வராததால் வெளியே இந்த கோயிலின் சிறப்பு குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. உலகில் பெரிய ஆட்கள் கூட யாரும் இதை சென்று பார்க்க வேண்டாம், உள்ளூரில் உள்ள நாமேனும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு அங்கு ஒரு விளக்கேற்றி வைத்து விட்டு வரலாமே!
 
 
 
 
நன்றிகள்:- சசிதரன்
 
 

நன்றிகள் : சசிதரன் :- உடையார் பயணம்.


உடையார் பயணம்.

திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் (வெள்ளை பிள்ளையார்) கோயிலில் க்ஷேத்ரபாலர் சன்னிதி ஒன்று "இருந்தது". இடிந்து வெறும் மண்மேடாக நெருஞ்சி முட்கள் சூழ கிடந்த இந்த இடத்தில் திரு. இரா.கலைக்கோவன், நளினி போன்ற கல்வெட்டு ஆய்வாளர்கள் அரும்பாடு பட்டு மிகுந்த சிரமத்துடன், இந்த சன்னதியில் இருந்த கல்வெட்டுகளை படி எடுத்தனர். இந்த க்ஷேத்ரபாலர் சன்னிதி, கோயில் வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் அப்போது தனிக்கோயிலாகவே விளங்கியுள்ளது. இக் கோயிலில் இருந்த கல்வெட்டுகளை கூறும் தகவலை ஆய்ந்தால் பிரமிப்பூட்டும் தகவல்கள் கிடைகின்றன, அதில் முக்கியமானது

"ராஜேந்திர சோழன் தனது தந்தையின் முதலாண்டு நினைவாக இந்த சன்னதியில் தான் எள் மலை புகுந்துள்ளார். அதாவது எள் கொண்டு நீத்தார் கடன் செய்ததைக் குறிப்பிடுகிறது.மேலும் ராஜேந்திர சோழனின் மனைவிகளில் ஒருவரான வானவன் மாதேவி இந்த கோயிலுக்கென ஒரு பொற்ப் பூவை அளித்துள்ளார்.அவரின் இன்னொரு மனைவியான கிழாநடிகள் பொன்னில் செய்த 25 நெருஞ்சிப் பூக்களை காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த கோயிலை கற்றளியாக எழுப்பிய ராஜ ராஜனின் மனைவியான உலகமாதேவியார் அறுபது பொற்பூக்களைப் காணிக்கையாக கொடுத்து தொழுதுள்ளார். உலகமாதேவியாரின் பணிமகள் வேளாண் இலங்கவிச்சாதிரி இரண்டு மஞ்சாடிக் பொன் அளித்துள்ளார்.

மேலும் முதலாம் ராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் உலகமாதேவியார் 144 கழஞ்சுப் பொன்னில் செய்யப்பட்ட 147 பொற்பூக்களைப் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்!.அதே போல் நகை அன்பளிப்பாக ஷேத்திர பாலருக்கு தகட்டுத் திருமாலை, தகட்டுத் தோள்வளை, தகட்டுப் பாத சாயலம் ஆகியவற்றை போனால் சாற்றியுள்ளனர்.

தட்சிணாய சங்கராந்தி அன்று ராஜேந்திர சோழன் 46 கழஞ்சப் பொன்னால் செய்யப்பட்ட 1116 பொற்பூக்களால் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்! ராஜேந்திர சோழரின் அன்னை திருபுவன மாதேவி 20 பொற்பூக்களைப் இட்டு வணங்கியுளார்.அதோடு பொன்னால் செய்யப்பட்ட உதரபந்தமும், தட்டும் வழங்கியுள்ளார். ராஜ ராஜ சோழன் இரண்டு சரணங்களை ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார். (தந்தையும், மகனும் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர்). இது அவர் இறப்பதற்கு முன் வழங்கப்பட்ட கொடை.

இது போக உலகமாதேவியார் ஷேத்திர பாலருக்கு வெள்ளி மானவட்டில் ஒன்றையும் அளித்துள்ளார்.அரசு அலுவலரான பெருந்தனத்துத் தந்தி வெள்ளியிலான பாத்திரம் ஒன்றும், வெண்கலத் தளிகைகள் இரண்டும், வெண்கலத்தாலான கவசமும், கரகமுடியும், இலைத் தட்டு ஒன்றும் வழங்கி வணங்கியுளார்.மற்றொரு பேரையன் என்ற அலுவலர் பொன் மோதிரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அரசர்கள்,அரசியர்,அலுவலர்கள் என அனைவரும் கொடுத்த கொடிகளை உரியவாறு பதிவு செய்ய இதற்கென ஆட்கள் நியமித்துள்ளார் உலகமாதேவியார். இந்த தகவல்கள் மூலம் இந்த ஷேத்திர பாலர் சோழ அரசர்களால் எவ்வளவு நேசித்து வணங்கபட்டுள்ளார் என்பதற்கு இந்த கல்வெட்டுகளே சான்று.

ஒரு காலத்தில் பொற்பூக்களால் சூழப்பட்ட ஷேத்திர பாலரின் சன்னதி தற்போது நெருஞ்சிப் பூக்களால் சூழப்பட்டு, கோயில் இடிந்து மண் மேடாக கிடந்ததை இப்போது தான் சீர் செய்துள்ளனர், இங்கிருந்து சில கற்களை வேறு கட்டுமானப் பணிகளுக்கு தூக்கிச் சென்று விட்டதால், தற்போது இந்த இடம் படத்தில் உள்ளதை போன்று தான் பரிதாபமாக காட்சியளிகின்றது. ஷேத்திர பாலராவது இருகிறாரன்னு கேக்கறீங்களா? அவர தூக்கி கொண்டு போய் தஞ்சாவூர் அருங்காட்சியத்துல காட்சிப் பொருளா வெச்சி ரொம்ப வருஷம் ஆகுது.

கல்வெட்டு தகவல்கள் : வரலாறு.காம்.


நன்றிகள் : சசிதரன் 
உடையார் பயணம்.

திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் (வெள்ளை பிள்ளையார்) கோயிலில் க்ஷேத்ரபாலர் சன்னிதி ஒன்று "இருந்தது". இடிந்து வெறும் மண்மேடாக நெருஞ்சி முட்கள் சூழ கிடந்த இந்த இடத்தில் திரு. இரா.கலைக்கோவன், நளினி போன்ற கல்வெட்டு ஆய்வாளர்கள் அரும்பாடு பட்டு மிகுந்த சிரமத்துடன், இந்த சன்னதியில் இருந்த கல்வெட்டுகளை படி எடுத்தனர். இந்த க்ஷேத்ரபாலர் சன்னிதி, கோயில் வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் அப்போது தனிக்கோயிலாகவே விளங்கியுள்ளது. இக் கோயிலில் இருந்த கல்வெட்டுகளை கூறும் தகவலை ஆய்ந்தால் பிரமிப்பூட்டும் தகவல்கள் கிடைகின்றன, அதில் முக்கியமானது 

"ராஜேந்திர சோழன் தனது தந்தையின் முதலாண்டு நினைவாக இந்த சன்னதியில் தான் எள் மலை புகுந்துள்ளார்.  அதாவது எள் கொண்டு நீத்தார் கடன் செய்ததைக் குறிப்பிடுகிறது.மேலும் ராஜேந்திர சோழனின் மனைவிகளில் ஒருவரான வானவன் மாதேவி இந்த கோயிலுக்கென ஒரு பொற்ப் பூவை அளித்துள்ளார்.அவரின் இன்னொரு மனைவியான கிழாநடிகள் பொன்னில் செய்த 25 நெருஞ்சிப் பூக்களை காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த கோயிலை கற்றளியாக எழுப்பிய ராஜ ராஜனின் மனைவியான உலகமாதேவியார்  அறுபது பொற்பூக்களைப் காணிக்கையாக கொடுத்து தொழுதுள்ளார். உலகமாதேவியாரின் பணிமகள் வேளாண் இலங்கவிச்சாதிரி இரண்டு மஞ்சாடிக் பொன் அளித்துள்ளார்.

 மேலும் முதலாம் ராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் உலகமாதேவியார்  144 கழஞ்சுப் பொன்னில் செய்யப்பட்ட 147 பொற்பூக்களைப் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்!.அதே போல் நகை அன்பளிப்பாக ஷேத்திர பாலருக்கு தகட்டுத் திருமாலை, தகட்டுத்  தோள்வளை, தகட்டுப் பாத சாயலம் ஆகியவற்றை போனால் சாற்றியுள்ளனர். 

தட்சிணாய சங்கராந்தி அன்று ராஜேந்திர சோழன் 46 கழஞ்சப் பொன்னால் செய்யப்பட்ட 1116 பொற்பூக்களால் ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார்!  ராஜேந்திர சோழரின் அன்னை திருபுவன மாதேவி 20 பொற்பூக்களைப் இட்டு வணங்கியுளார்.அதோடு பொன்னால் செய்யப்பட்ட உதரபந்தமும், தட்டும் வழங்கியுள்ளார். ராஜ ராஜ சோழன் இரண்டு சரணங்களை ஷேத்திர பாலருக்கு சாற்றியுள்ளார். (தந்தையும், மகனும் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர்). இது அவர் இறப்பதற்கு முன் வழங்கப்பட்ட கொடை.

இது போக உலகமாதேவியார் ஷேத்திர பாலருக்கு வெள்ளி மானவட்டில் ஒன்றையும் அளித்துள்ளார்.அரசு அலுவலரான பெருந்தனத்துத் தந்தி வெள்ளியிலான பாத்திரம் ஒன்றும், வெண்கலத் தளிகைகள் இரண்டும், வெண்கலத்தாலான கவசமும், கரகமுடியும், இலைத் தட்டு ஒன்றும் வழங்கி வணங்கியுளார்.மற்றொரு பேரையன் என்ற அலுவலர்  பொன் மோதிரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அரசர்கள்,அரசியர்,அலுவலர்கள் என அனைவரும் கொடுத்த கொடிகளை உரியவாறு பதிவு செய்ய இதற்கென ஆட்கள் நியமித்துள்ளார் உலகமாதேவியார். இந்த தகவல்கள் மூலம் இந்த ஷேத்திர பாலர் சோழ அரசர்களால் எவ்வளவு நேசித்து வணங்கபட்டுள்ளார் என்பதற்கு இந்த கல்வெட்டுகளே சான்று.

ஒரு காலத்தில் பொற்பூக்களால் சூழப்பட்ட ஷேத்திர பாலரின் சன்னதி தற்போது நெருஞ்சிப் பூக்களால் சூழப்பட்டு, கோயில் இடிந்து மண் மேடாக கிடந்ததை இப்போது தான் சீர் செய்துள்ளனர், இங்கிருந்து சில கற்களை வேறு கட்டுமானப் பணிகளுக்கு தூக்கிச் சென்று விட்டதால், தற்போது இந்த இடம் படத்தில் உள்ளதை போன்று தான் பரிதாபமாக காட்சியளிகின்றது. ஷேத்திர பாலராவது இருகிறாரன்னு கேக்கறீங்களா? அவர தூக்கி கொண்டு போய் தஞ்சாவூர் அருங்காட்சியத்துல காட்சிப் பொருளா வெச்சி ரொம்ப வருஷம் ஆகுது.

கல்வெட்டு தகவல்கள் : வரலாறு.காம்.                                                                                                                                                                                 

Tuesday, July 23, 2013

முடக்கற்றான் கொடி..!

முடக்கற்றான் கொடி..!

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான் ( Cardiospermum halicacabum )



 

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக:

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.


பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு :

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

Saturday, July 20, 2013

வானகம் - நிரந்தர வேளாண் பண்ணை இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

வானகம் - நிரந்தர வேளாண் பண்ணையில்
( சுவரில்லா கல்வி ) 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

நாள் : ஜுலை 30.7.13 செவ்வாய் காலை 9 மணி முதல் 1.8.13 வியாழன் மாலை 5 மணி வரை

இடம் : வானகம், கடவூர், சுருமான்பட்டி, கரூர் மாவட்டம்

முன்பதிவு செய்ய : 94880 55546, 94435 75431

பயிற்சி நன்கொடை : ரூ.1200/- மட்டும் . 
தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

முன்பதிவு & பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311

பயிற்சியில் :

1. இயற்கை வேளாண்மையின் அவசியமும் , மரம் வளர்ப்பு பயிற்சியும்
2. நிரந்தர வேளாண்மையை எப்படி செலவில்லாமல் செய்வது பற்றியும்..
3. பஞ்சகாவியா, மீன்அமிலம், பூச்சுவிரட்டி தயாரிப்பு பற்றியும்,
4. மருந்தில்லா மருத்துவம் பற்றியும்,
5. சிறு தானியங்களின் அவசியம் பற்றியும்,
6. வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் பற்றியும்,
7. சுற்றுசுழல் பராமரிப்பும், அதன் தேவையும்,
8. சுய சார்பு வாழ்வியல் கல்வியும்,
9. தின்னைப் பேச்சு பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

இவை அனைத்தும் நேரடி களப் பயிற்சிகளே.. உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை ( உயிர் கருவை ) உயிர்பிக்க காத்துக் கொண்டிருக்கிறார் இயற்கை வாழ்வியல் நிபுணர் “ கோ. நம்மாழ்வார் “..

இன்னும் விதை தேவை, விதைகளை சேகரிப்போம். நேர்த்தியான விதையாய் மாறுவோம்.

வாழ்க இயற்கை! வாழ்க இயற்கை வேளாண்மை!!

சிவகாசியில் நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மை பயிற்சி முகாம்


சிவகாசியில் நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மையும் ( Permacultre ) &
இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி முகாம் ( வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட )
தின்னைப் பேச்சு :
--------------------
இரவு நேரங்கலில் நமது பாரம்பரிய தின்னைப் பேச்சும், சுற்றுப்புறசூழல் பற்றிய விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப் படும்.

இந்த சுயசார்பு பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய...


 பயிற்சி நாள் :
ஆகஸ்ட் 09-08-2013 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல்
11-08-2013 ஞாயிறு மாலை 5 மணி வரை

முன்பதிவு அவசியம் : 94435 75431 , 99947 56330.

 இடம் :
ஜேசுதாஸ் இயற்கை விவசாயப் பண்ணை,
நடுவப்பட்டி விளக்கு,
ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு,
சிவகாசி.
விருதுநகர் மாவட்டம்.

நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்

நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் 
(Vanagam Nammalvar Ecological Foundation ) 
Surumanpatti, Kadavur, 
Tharagampatti Via, Karur Dist, 
Tamil Nadu, India 
contact no: 9443575431, 9488055546

Friday, July 19, 2013

தண்ணீர் கலெக்டர்...

தண்ணீர் தண்ணீர் கலெக்டர் !!

---------------------------------------

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

இதை எண்ணத்தில் கருக்கொண்டு, உருக்கொணரும் ஓர் முயற்சியே இந்தியாவில் முதல்முறையாக சோதனை முயற்சியாய் மேற்கொள்ளப்பட்டிருப்பதாய் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சாதனை.

சிலர் சென்ற இடமெல்லாம் சிறக்கும். நெல்லையில் கலெக்டராக இருந்தபோதே, இவரது புரட்சித்திட்டங்கள் பல இனிக்கும். தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும், நெல்லை மாநகரப்பகுதியிலேயே, வாரம் ஒருமுறைதான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நடைமுறை இருந்தது அப்போது, நெல்லை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரை கிணறுகள் அமைந்த மணப்படை வீடு ஆற்றுப் படுகையின் பக்கம் இவர் பார்வை பட்டது.

இரு நாட்கள் அவர் இருந்ததெல்லாம் அந்த ஆற்றுப்படுகையில்தான். ஆற்றுக்குள் இருந்த உரைகிணற்றின் மீதேறி, அங்கு பணியிலிருந்த தொழிலாளிகளிடம் உரையாடி உற்சாகப்படுத்தன் விளைவு, தியாகராஜநகர் பகுதிக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைத்தது.

அடுத்து அவர் சென்ற மாவட்டம்தான் திருவாரூர். சென்ற இடத்திலெல்லாம் சிறந்த முத்திரை பதிப்பது அவர் வாடிக்கை. அப்படி அவர் பதித்த முத்திரைதான் இந்த நீர்மூழ்கி தடுப்பணை. அந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் விழுந்து கிடந்ததை அறிந்த அவர் முதலில் குளங்களில் தேங்கியுள்ள மழைநீரை, ஆழ்துளை மூலம் பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர முயற்சிகள் மேற்கொண்டார்.

தற்போது, நீடாமங்கலம் அருகே, வெண்ணாற்றின் குறுக்கே,125 மீட்டர் நீளம்,10மீட்டர் அகலத்தில் பள்ளம் தோண்டி, அதில் 8 மீட்டர் ஆழத்தில்,38,000 மணல் மூடைகளை தண்ணீர் புகாத, மக்காத தார்பாயில் அடுக்கி தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு, ஆற்று நீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து, பூமிக்குள் நீரைச்செலுத்தி தேக்கிவைக்க உதவிடும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

கோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார்.

இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...

ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்...

"பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்டை அரிசி கிடைக்கும்... ஆனால் இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...

நான் எடுத்து இருக்கேன்... அதற்காக அரசிடம் இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்... அமெரிக்க சனாதிபதி என்னுடைய தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருக்காரு. ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டேங்குது... காரணம் இதக் கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க, உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப் போகும்...வெளிநாட்டுக் காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...

நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான் பண்ண முடியும்... அதுல ஆராய்ச்சி பண்ண முடியும்... நீங்க தான கணினி, இணையம் அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க... நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான் உசுரக் கொடுக்க முடியாது... ஆனா செத்துப் போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்... இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."

அவர் பெயர் நாக இரத்தின நாயுடு (http://www.srinaidu.com/profile.htm)... அவரின் தோட்டத்தினைப் பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார் http://www.srinaidu.com/
தேவைபட்டால் தயங்காமல் பேசுங்கள் தமிழிலேயே பேசுவார்.

PROFILE
Sri Gudiwada Nagarathanam Naidu
58 Years
Chittoor Dt (Andhra Pradesh)
8-66 Gowtham Nagar Colony, Dilsukhnagar. Hyderabad
09440424463
04024063963
Farm Address
Taramathipeta VI, Hyathnagar Mandal, Rangareddy dist.

Thursday, July 11, 2013

காஞ்சி கைலைநாதர் ஆலயம்.

காஞ்சி கைலைநாதர் ஆலயம் பற்றிய தகவல்கள்:


காஞ்சி கைலாசநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது . ஹிந்து மத கடவுள் சிவாவிற்காக கட்டப்பட்டது .
கோவிலின் சுற்றுச்சுவர் மணற்கற்களால் , அதன் மேல் தெய்வங்களின் வாகனங்கள் என்று நம்பப்பட்ட சிற்ப்பங்களின் அமைப்புடன் கட்டப்பட்டு உள்ளது.இன்று இந்த கோவில் அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பல்லவர்கள் காலத்தில் கி.பி 8ம் நுற்றாண்டில் பல்லவ மன்னன் 2ம் நரசிம்மன் அவர்களால் கட்டப்பட்டது . கோவிலின் விமானம் மிகவும் அற்புதமாகவும் நடராஜரின் வெவ்வேறு விதமான தோற்றங்கள் உடன் கட்டப்பட்டு உள்ளது .




















முதலாம் ராஜராஜ சோழர் அவர்களால் " காஞ்சிபெட்டு பெரிய திருக்கற்றளி "
( கற்களால் அமையப்பெற்ற பெரிய திருக்கோவில் ) என்று சொல்லப்பட்டும் மற்றும் தஞ்சை பிரகதிஸ்வரர் கோவில் கட்ட தூண்டுதலாக இருந்து என்றும்
மேற்கண்ட  தகவல்களை வரலாறு நமக்கு தருகின்றது.

ள  சிறப்பு : 
    உள் பரிகாரத்தில் கடவுளின் கருவறையை சுற்றிவர சிறிய குகை போன்ற பாதை அமைக்கப்பட்டுள்ளது . அது இந்த மனித வாழ்வின் , வாழ்வியலான பிறப்பையும் இறப்பையும் குறிக்கின்றது.
       குகைக்கில் நுழைதல் இறப்பையும் , வெளி வருதல் பிறப்பையும் , இதற்கு 
மூலம் கடவுள் என்பதையும், பிறப்பில் அனைவரும் கடவுளின் முன்பு சமம் என்பதையும் குறிக்கின்றது.
   உடற்கட்டு உள்ளவர்கள் இந்த பாதையின் வாயிலாக செல்ல இயலாது என்பதையும் வருத்தத்துடன் இங்கு பதிவு செய்கின்றேன்.

Monday, June 24, 2013

முருகன் மற்றும் கரப்பான்பூச்சி உணவகம்

         சென்னையில் ஒரு பகுதி . கே.கே.நகர். அங்கு உள்ள ஒரு உணவகத்தின் பெயர் தான் கரப்பான்பூச்சி உணவகம். இந்த உணவகத்துக்கும் முருகனுக்கும் தொடர்பு உள்ளது.அதை பின்னால் பார்க்கலாம் .
           ஆம்  வாழ்க்கையில் இன்று ஒருவனின் வாழ்க்கை வரலாறை கேட்க்கும் நிலை உருவானது .அந்த உரையாடலை தொகுத்து தருகின்றேன் .நாம் வாழ்வில் இது போல சிலரை சந்தித்து இருப்போம் என்று நம்பிக்கையில் இதை எழுதுகின்றேன் .
           நான் இரவு உணவு உண்ணும் உணவகம் தான் கரப்பான்பூச்சி உணவகம்.
அங்கு வேலை செய்யும் சிறுவனின் பெயர் விஜயராஜ். பிறப்பிடம் ஆந்திரா மாநிலம் ராமகிரி மாவட்டம், நாகலாபுரம். வயது 15. அம்மாவிற்கு பார்வை இல்லை. அப்பா மரணம் அடைந்து 15 வருடங்கள் ஆகின்றது.அக்காள் திருமணம் முடித்து அவர்களின் பெண் குழந்தைக்கும் திருமணம் முடிந்தது. அப்படியானால், பெண் குழந்தை வயது ?. ஆம் என் முதல் கேள்வி இது தான்.
     ஊருக்கு பொங்கலுக்கு மட்டும் செல்வானாம். இதை எளிதாக சுருங்க சொல்லிவிட்டேன் . கண்கூடக அவனின் அசைவுகளின் நடுவில் இருந்தால் என்னால் சொல்ல இயலவில்லை.சிரிப்பு அறவே இன்றி அவன் சொன்னது மனதை சில நிமிடம் நிறுத்துகின்றது.ஆம்  இந்த வேகமான வாழ்க்கையில் எதையும் எதிர் நோக்காமல் வரும் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல, எதிர் நோக்கும் அவனின் வாழ்க்கை போராட்டம் 5ம் வகுப்போடு அவனின் கல்விக்கும் வேட்டு வைத்து விட்டது.பார்த்த உடன் தெரியும், அவன் சற்று நிறுத்தி கற்கும் மனநிலை உடையவன் என்று.ஆனால் அவன் வாழ்க்கையில் போராடும் போராட்டம் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவே இதை தருகின்றேன். அனுதாபம் பட தரவில்லை.

ஆம்  நம்மிடம் இது போல விஜயராஜ் பலர் இருக்கின்றார்கள். காரணம் படிப்பறிவு குறைவும், பணமும் தான். சற்று  சிந்திப்போம் .........

சரி, முருகன் மற்றும் கரப்பான்பூச்சி உணவகம் . கரப்பான்பூச்சி உணவகம்-இது பட்டை பெயர். உண்மையான பெயர் சண்முகநாதர் உணவகம்.
கிட்டதட்ட 4 வருடங்களாக அங்கு இரவு உணவு உண்ணும் எனக்கு இதுவரை  கரப்பான்பூச்சி வந்தது இல்லை. என் சக நண்பரும் நானும் ஒரு முறை உணவு உண்ணும் பொழுது அவருக்கு மட்டும் கரப்பான்பூச்சி-யுடன் உணவு பரிமாறப்பட்டது. இது நடந்து 3 வருடங்கள் ஆகின்றது. அதன் பின் அவர் என்னை காண வந்தாலும் அங்கு மட்டும் உணவு உண்ண வரமாட்டார் .
இப்பொழுது விளங்கியதா "முருகன் மற்றும் கரப்பான்பூச்சி உணவகம்"....


With Love UR's
Murali_Jasmine
24/06/2013.



Friday, June 7, 2013

கிராமம்-ஆரம்பம்......

கிராமம் இந்த வார்த்தையின் உச்சரிப்பில் ஏதோ ஒன்று உள்ளது. அதனால் தான் மனது எத்தனை சஞ்சலத்தில் இறந்தாலும் ஒரு அமைதியை எடுத்து முன் வைக்கின்றது . ஆம் நானும் கிராமத்து வாசி தான்.
       ஒவ்வொருவர் பார்வையிலும் இந்த கிராமம் மாறுபடும். படங்களில் கிராமத்தை கண்டவர்களுக்கு , அதன் பின்னணியில் ஒரு கிராமம் மனக்கண் முன்னாடி நிழலாடும் !.........

வைரமுத்து - கருவாச்சி காவியம் ( Karuvachi Kaviyam By Mr.Vairamuthu )

https://docs.google.com/file/d/0B7vzSvrIEcbYR2lDSDB1QjlERnM/edit?usp=sharing

வைரமுத்து அவர்களின்  கருவாச்சி காவியம்.

6 மாத இடைவெளி

6 மாத இடைவெளி மனிதனை எத்துனை மாற்றங்களை ஏற்றக, இறக்க வைக்கின்றது.

ஆம் இந்த இடைப்பட்ட காலங்களில் எத்தன்னை இறப்புகள் , பிறப்புகள்
அத்தனையும் நம்மை சுற்றி என்றால் ....
ஓவ்வொரு மாதமும் ஒரு  இறப்பு ,,,
ஏற்கின்றோம் .....சற்று தயக்கத்துடன் ,,,,,,,
நம் வீடுகளில் ,,, அண்டை வீட்டில் ,,,,உறவுகளில் ,,,,,,
உடன் வேளை பார்கின்றவர்களின் வீடுகளில் ,,,,,,,,,,,,
பிறப்புகளை ஏற்கின்ற மனது இறப்புகளை சற்று தள்ளியே வைத்து பார்த்து பழகியது தான் இதற்கு காரணம்,,,,,