Thursday, July 11, 2013

காஞ்சி கைலைநாதர் ஆலயம்.

காஞ்சி கைலைநாதர் ஆலயம் பற்றிய தகவல்கள்:


காஞ்சி கைலாசநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது . ஹிந்து மத கடவுள் சிவாவிற்காக கட்டப்பட்டது .
கோவிலின் சுற்றுச்சுவர் மணற்கற்களால் , அதன் மேல் தெய்வங்களின் வாகனங்கள் என்று நம்பப்பட்ட சிற்ப்பங்களின் அமைப்புடன் கட்டப்பட்டு உள்ளது.இன்று இந்த கோவில் அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பல்லவர்கள் காலத்தில் கி.பி 8ம் நுற்றாண்டில் பல்லவ மன்னன் 2ம் நரசிம்மன் அவர்களால் கட்டப்பட்டது . கோவிலின் விமானம் மிகவும் அற்புதமாகவும் நடராஜரின் வெவ்வேறு விதமான தோற்றங்கள் உடன் கட்டப்பட்டு உள்ளது .




















முதலாம் ராஜராஜ சோழர் அவர்களால் " காஞ்சிபெட்டு பெரிய திருக்கற்றளி "
( கற்களால் அமையப்பெற்ற பெரிய திருக்கோவில் ) என்று சொல்லப்பட்டும் மற்றும் தஞ்சை பிரகதிஸ்வரர் கோவில் கட்ட தூண்டுதலாக இருந்து என்றும்
மேற்கண்ட  தகவல்களை வரலாறு நமக்கு தருகின்றது.

ள  சிறப்பு : 
    உள் பரிகாரத்தில் கடவுளின் கருவறையை சுற்றிவர சிறிய குகை போன்ற பாதை அமைக்கப்பட்டுள்ளது . அது இந்த மனித வாழ்வின் , வாழ்வியலான பிறப்பையும் இறப்பையும் குறிக்கின்றது.
       குகைக்கில் நுழைதல் இறப்பையும் , வெளி வருதல் பிறப்பையும் , இதற்கு 
மூலம் கடவுள் என்பதையும், பிறப்பில் அனைவரும் கடவுளின் முன்பு சமம் என்பதையும் குறிக்கின்றது.
   உடற்கட்டு உள்ளவர்கள் இந்த பாதையின் வாயிலாக செல்ல இயலாது என்பதையும் வருத்தத்துடன் இங்கு பதிவு செய்கின்றேன்.

No comments:

Post a Comment