ஆனால் ,
அமைதியின் மார்கம் அமைதியாய் இருக்க கண்டோம்.
அமைதி, அடக்கம் செய்யப்பட்டதோ?
நீரும் , இரத்தமும் ஒன்றா?
குருதியின் வாடையில்
பிஞ்சை நஞ்சாக்கி ,
மண்ணில் இட,
விதைத்தது முளை காட்ட,
நீர் வற்றிய நெஞ்சாகி ,
வளர்ந்தது, நஞ்சு!,
நிழல் தரும் மரமல்ல!.
உன் நெஞ்சில் இல்லா நீர்,
உன் மண்ணில் ஊராதே.
உன் மனதிற்கு நீ இட்ட கரிமருந்தால்,
பாலைவனமாய் போனது
பலரின் வாழ்வும், உன் தேசமும்.
உன் இனம் தொழும் இடமும்
உன் பிள்ளைகளின் அறிவு
வார்க்கும் இடமும்,
உன் பெண்டிரும் முன் வைக்கும்
முதல் அடியிலும்,
நீ விதைத்த நஞ்சால் ,
சாம்பலாய் போனோர் சிலர்,
சாம்பலை மிதித்து அடி வைபோர் பலர்!
நீ கட்டும் சாம்பலின் கோபுரங்கள்
காற்றில் பறக்கும் தூசு தான்,
வளர்ந்தது மரமாய் இருப்பின்?
யாரை வளர்க்கின்றாய் ?
ஏன் வளர்க்கின்றாய் ?
எதை நோக்கி உன் பார்வை?
உன் மகளும் தவிக்கிறாள்
பறவையாய் பறக்க அல்ல,
வெளியுலகம் கானது ,
சிறகின்றி உன்னால் !
அவள் இடும் சோற்றிலும்
இரத்த நெடி வேண்டும் -
உன் நெஞ்சால்,
அவளின் வாழ்வும்
பாலைவனமாய்,
உன் கரிமறுந்தால் வெடித்து
சிதறிய நெஞ்சை,
உருண்டு ஓடிய கண்களை,
தொங்காடும் சதைகளை ,
உன் உணவில் சேர்த்து தின்பாயோ?
உன் இனம் உன்னால்,
உன் கரிமருந்தின் அமைதியால் ,
அமைதியின் மார்கம்,
அடக்கம் செய்யப்பட்டது!!
உன்னால் விளைந்தது,
உன்னால் வளர்ந்தது,
என்னவோ? எதுவோ?
ஆனால்,
உன்னால் அழிந்தது,
உன்னால் இழந்தது,
உன்னால் முடிந்தது
எவ்வளவோ?
உன் தேசத்தின் குரல்,
அழுகுரலாய் கேட்கிறது!
ஆனால் உன் குரலோ?
உன் தேசத்தின் பட்டினி,
நெஞ்சை உறைய வைத்தது!
ஆனால் உன் தட்டில் மட்டும்
கறி விருந்து?
உன் இனம் வாழ
பிறர் இனம் அழித்தாயே?
ஆனால் உன் இனமும்
அளிக்கின்றது உன்னாலே?
யாரை காக்க செய்தாயோ?
எதை காக்க செய்தாயோ?
உன்னாலே அழிவதை காண்பாய்?
No comments:
Post a Comment