Wednesday, September 29, 2021

சுயநலம்

தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று, இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம்முடைய வாழ்வியல் முறைகளே காரணம்.

கூட்டு குடும்பமாக நாம் இன்று வாழ விரும்பவில்லை. காரணம் , தேடிக்கொண்ட வாழ்வியல் சூழல்.  

இந்த வாழ்வியல் சூழல் , நம் உறவுகளை நம் பிள்ளைகளுக்கு அடையாளப்படுத்த, உறவுகளை மேம்படுத்த , எப்படி உதவும்?. 
இவைகளை நாம் களைய முற்படவில்லை என்பதும் உண்மை.

உறவுகளை சொல்லித்தர நாம் தயாராக இருக்க வேண்டும். முதலில் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அனைவரும் உறவுகளை விட்டு தள்ளி இருக்க காரணம் பணம். பணம் கொண்டு பகை வளர்த்த காரணத்தால் எட்ட நிற்க வேண்டிய நிலை.

இந்த பணம் சம்பாதிக்க செல்லும் போது வரும் புது உறவுகள் சில மட்டுமே உண்மையாக இருக்கும்.

அங்கிள், ஆன்டி என்று சொல்லி தரும் நாம், அந்த வார்த்தைகளை பிள்ளைகள் பேசும்போது பெருமைப்படும் நாம், சரியான முறையில் உறவுகளை சொல்லி தந்தால் நன்று.

ஏன் என்றால், குலம் , கோத்திரம் என்று சொல்லுவார்கள். நம்மில் எத்தனை பேருக்கு இன்று உங்களின் குலப்பெயர், கோத்திரம் தெரியும்?

என்ன காரணத்திற்காக இவைகள் உண்டானது?
நாம் ஒருவரின் காரிய சடங்கு செய்யும் பொழுது மூன்று தலைமுறை வம்சாவளி முன்னோர் பெயரை சொல்ல வேண்டும். 
எத்தனை பேருக்கு இவைகள் தெரியும்?

உடன் பிறந்தவர்களை தவிர யாரையும் திருமணம் செய்யலாம் என்ற  ஒரு முறை இன்று நம் சமகால வாழ்வில் வளர்ந்து வருகின்றது. 

குலம் , உண்டானது இது போன்ற முறைகள் வராமல் இருக்க உருவாக்கப்பட்டது. நாம் பின்பற்ற தவறியதால் , உறவு முறையில் அண்ணன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கின்ற உலகில் வாழ்கின்றோம்.

சரி, ஒரு சிறு சந்தேகம்,

இஸ்லாம் விஸ்தரிக்க முயற்சி செய்வதின் விளைவு நம் கண்முன் நடக்கும் போர்கள்.


ஏன் கிருஸ்துவம் மட்டும் உலகம் முழுவதும் பரவி வருகின்றது?
பரப்பப்படுகின்றது? 

என்ன நோக்கம்? என்ன பயன்?

உதவிகள் செய்ய , உதவிகள் பெற மதம் என்ன கருவியா?

மதம் கடந்து , மனம் விரும்பி திருமணம் செய்யும் பொழுது எங்கிருந்து வந்தது மதம்?

இந்து மதம் சார்ந்த நபர் மட்டும் மதம் மாறவேண்டும். மற்ற மதத்தை தேடி சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
ஆனால், இந்த திருமணத்தில் இந்து மதம் சார்ந்த வீட்டார் , பிள்ளைகளின் மனம் போல வாழ வழி விடுகின்றனர். மதம் மாறுகின்றனர். மற்ற மதத்தில் சிலர் மட்டும் மதம் கடந்து பார்க்கும் பார்க்கின்றனர்.

மதம் மாற வில்லை என்றால் , திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி மற்ற மதத்தினர் , அவர்களின் பிள்ளைகளின் நலன் கடந்து மதத்தின் மீது பற்று கொள்கின்றனர்.

எல்லாம் சம்மதம் என்று சொல்லும் இந்து மதம் மட்டும் எல்லோருக்கும் கசக்கிறது.


சுயநலமாக வாழ தொடங்கியதால் வந்தது.


தொடரும் ... பகுதி 6...




No comments:

Post a Comment