Monday, August 20, 2018

முன்னோடிகள் மறைவு திரு. வாஜிபாய்..- திரு. கருணாநிதி



இந்த மாதம் ஆகஸ்ட் 7 ம் நாள் தமிழகத்தின்  மூத்த அரசியல்வாதியும் , தமிழகத்தின் முன்னால் முதல்வருமான திரு. கருணாநிதி.மு.க. அவர்கள் இந்த மண்ணுலகில் தன் பூத உடலை விட்டு , தமிழக அரசியல் மற்றும் இந்த இந்திய நாட்டின் அரசியலிலும் ஆத்மாவையும் விட்டுவிட்டு சென்றார்.
(மார்ச் 03,1924) - (ஆகஸ்ட் 07,2018 )
இந்த மாதம் ஆகஸ்ட் 16 ம் நாள் இந்தியாவின்   மூத்த அரசியல்வாதியும் , இந்தியாவின் முன்னால் பிரதமர்   திரு. அடல் பிஹாரி வாஜிபாய்  அவர்கள் இந்த மண்ணுலகில் தன் பூத உடலை விட்டு ,  இந்த இந்திய நாட்டின் அரசியலிலும் , வளர்ச்சியிலும் தன் ஆத்மாவையும்  விட்டு விட்டு சென்றார்.
(டிசம்பர் 25,1924) - (ஆகஸ்ட் 16,2018 )

இரு பெரும் அரசியல் முன்னோடிகள் மறைவு வருத்தத்தை தந்தாலும் , இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் , என் மனதில் உள்ள எண்ணத்தின் படி ,
திரு. அடல் பிஹாரி வாஜிபாய்  அவர்கள் உயர்ந்தவர்.

" இந்தியா எனும் நாடு உலக நாடுகள் ஏற்று கொண்டாலும் இல்லை என்றாலும் அணு ஆயுதம் கொண்ட ஒரு வளரும் வல்லரசு நாடு. நீங்கள் போட்ட தடைகளால் நாங்கள் துவண்டு விடவில்லை. இன்னும் ஒரு படி முன்னேறி அணு பிளவு  / அணு இணைப்பு இரு முறைகளிலும் தன்னிறைவு பெற்று விட்டோம். உங்களின் தடைகளை நாங்கள் வென்றுவிட்டோம். இந்தியா முதலில் அணுகுண்டை பயன் படுத்தாது" என்கின்ற ஒரு பேச்சு ஓவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் உயர்ந்த வரிகளின் சொந்தக்காரர் .

ஊழல் கரை படியாத நிலையில் , உயர்ந்து நிற்கின்றார்  திரு. அடல் பிஹாரி வாஜிபாய்  அவர்கள்.











No comments:

Post a Comment